யாரோ இவன் - கனவுப்புரவி மனிதன்
என் கவிதை சு.மா.காயத்ரி
காரிருள் கானகத்தில்
கனவுவென்ணும் புரவியில்
வலம் வந்தவன்...
ஜன்னலோர படுக்கையில்
கண்விழித்து பார்கையில்
என்னை கடந்து சென்றவன்....
மேகமென்னும் வாகனத்தில்
உருமாறி உருவம் மாறி
என்னை ஈர்த்தவன்
மழைகாற்றில் உதித்து
மண்ணின் வாசமாய்
காற்றில் வந்தவன்
தனிமையில் உழன்று உழன்று
நகர்ந்த நாட்களில்
அவனென்னும் கவிதைகளில்
என்னை தொலைத்தவள்
என்னில் பதியாத
- அவன் முகமும்
எண்னில் உயிராடும்
- அவனின் நினைவுகளும்
என் கண்ணீர் விதைகளில்
- கவிதையாய்
முளைத்து வாழ்கின்றவன்

NANDRU
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete