Tuesday, 26 February 2013

எவனோ ஒருவன் ...... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

எவனோ ஒருவன் ......
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி




மெல்ல வீசும் தென்றல் 
எதிர் படும் காற்றில் கரைந்து
என்னை கரைய வைப்பவன் ......
இமையாலும்
 என் மனதாலும் !!!!!
விளகனைந்த பின்பும்
அழியாத சிறு தீ பொறியாய்
நான் அணைந்த பின்பும்
என்னில் சிறு தீயாய் தவிப்பவன் !!!!
என் கனவென்னும் பயணம்
முடிந்த தருவாயில்
என் விழியோரம் நின்று
 
சென்று விடவா என அனுமதி கோருபவன் !!!!
என் வார்த்தை என்னும்
தீயில் வாட்டினாலும்
விட்டில் பூச்சியாய்
அமைதியாய்
 என்னில் விழுபவன் !!!!
ஊரடங்கிய பின்பும்
ஏதோ ஓர் திசையில்
ஒளிரும் விளக்காய்
என்றும் என்னில் ஒளிர்பவன் !!!!!
என் இமை மூடி கிடந்தாலும்
உடல் சோர்ந்து விழுந்தாலும்
துடித்து கொண்டிருக்கிறான்
என் இதயமாய் !!!!!

எவனோ ஒருவன்......

3 comments:

  1. thoughts ku kavarchi teva illa... ennagala sollli mattu vecha pothum innikki illanalum ennikavthu matratha kondu varum

    ReplyDelete
  2. என் கவிதையின் வணக்கங்கள் ....
    மதிப்பிற்குரிய வாகினிக்கு !!!!
    தங்கள் கருத்தை கொஞ்சம் தெளிவாக சொல்லலாமே .....

    ReplyDelete