என்னை தொலைத்த உலகம்
என் கவிதை காயத்திரி
என் கவிதை காயத்திரி

கனல் நீராய் கரைந்தோடுது
இந்த நாட்கள்
கரைந்து கரைந்து விழியும் வற்றிவிட்டது...
அக்கம் பக்கம் எல்லோரும் இருந்தாலும்
என் பக்கம் யாரும் இல்லை...
யாரை இங்கு தொலைப்பது
என்னை எல்லோரும் தொலைத்துவிட்டபோது...
எல்லாம் கடந்து விட்டது
எங்கும் போகாமல்...
பாறையில் செய்த என் மனம்
இன்று மெழுகு போல் உருகித்தொலைகிறது....
எல்லோருக்குமான தொலைந்த கனவுகள்
விருப்பு வெறுப்புகள்
எல்லாம் இன்று என் மூலமாய்
வாழ்கிறார்கள்...
என்கனவுகளை சிதைத்துவிட்டு
புதைத்துவிட்டு மிதித்துவிட்டு நகர்கிறார்கள்
இந்த மனித மிருகங்கள்...
எனக்கான பாதையும் இதுவல்ல
இந்த பாதையின் பயணியும் நானல்ல...