Monday, 30 December 2013

யாரோ இவன் - கனவுப்புரவி மனிதன்...... என் கவிதை சு.மா.காயத்ரி


யாரோ இவன் - கனவுப்புரவி மனிதன்
என் கவிதை சு.மா.காயத்ரி











காரிருள் கானகத்தில்
தனிமையில் உதித்து
கனவுவென்ணும் புரவியில்
வலம் வந்தவன்...
ஜன்னலோர படுக்கையில்
கண்விழித்து பார்கையில்
என்னை கடந்து சென்றவன்....
மேகமென்னும் வாகனத்தில்
உருமாறி உருவம் மாறி
என்னை ஈர்த்தவன்
மழைகாற்றில் உதித்து
மண்ணின் வாசமாய்
காற்றில் வந்தவன்
தனிமையில் உழன்று உழன்று
நகர்ந்த நாட்களில்
அவனென்னும் கவிதைகளில்
என்னை தொலைத்தவள்
என்னில் பதியாத 
- அவன் முகமும்
எண்னில் உயிராடும் 
- அவனின் நினைவுகளும்
என் கண்ணீர் விதைகளில்
 - கவிதையாய் 
 முளைத்து வாழ்கின்றவன் 

Thursday, 26 December 2013

வட்டமிட்ட பூமி....... என் கவிதை சு.மா.காயத்ரி

வட்டமிட்ட பூமி
என் கவிதை  சு.மா.காயத்ரி













இன்று பார்த்தவை
எல்லாம் மறைந்து கொண்டிருக்கிறது
வட்டமிடும் பூமி பந்தின்
சுழற்சியில் ஈடுகொடுக்காமல்
என்றோ தொலைந்தவர்கள் 
எல்லாம் இன்று இங்கே
தடம்மாறி இடம்மாறி
கடந்தவர்கள் எல்லாம் இன்று 
வாழ்க்கை என்னும் வட்டத்தினுள்
சுற்றி சுற்றி தொலைகிறார்கள்
தொலைத்த உறவுகள்
தொலைத்த தொடர்புகள்
தொலைந்த மானுடர்கள்
தினம் தினம் வட்டம்
மாறி மாறி 
ஆடும் சடுகுடு ஆட்டம் 
இது வாழ்க்கை போராட்டம்
-          இவள்...





Saturday, 21 September 2013

நீயும் நானுமாய்....... என் கவிதை சு.மா.காயத்ரி



நீயும் நானுமாய்.......

என் கவிதை சு.மா.காயத்ரி















நீ என நீ என
தொடங்கிய உன் சந்திப்புகள்....
நீயாகவே முடிவுற்றன.....
நீ என நீதான் என
தொடங்கிய என் நாட்கள்
நீயும் நானுமாய்
அலைபேசியில் சுகமாய் முடிகிறது .....
எண்ணில் அடங்காத
முறை உன் நினைவுகளில்
- தொலைகிறேன்: மீள வேண்டாம்                                        
என்ற கொள்கையோடு....
நீயும் நானுமாய்
நகரும் இந்நாட்கள்
நாமும் நீயுமாய் முடியட்டும் .....


Thursday, 25 July 2013

இது முரண்பாடு..... என் கவிதை சு.மா.காயத்ரி



இது முரண்பாடு
என் கவிதை சு.மா.காயத்ரி

 

மழை பொய்த்துவிட்டது
என்றாய்
என் கண்கள் குளமாகி
நிற்கிறது
பார்த்துவிடுவாயோ என்ற
பயத்தில்
கானல் நீரில் நனைந்து
நிற்கிறேன்.....
உன் நினைவுகள் சுமந்து
சுமந்து
என் நெஞ்சுகூடு
வெம்பி நிற்கிறது .....
என்னவாகும் என்னவாகும்
என்றே தெரியாமல்
வெறுமையாய் போகும்
எந்தன் நாட்கள்......
கூந்தலை சேரா
கல்லறை பூக்களாய்
உன்னை சேர
முடியாமல் இங்கு நான் .....

Saturday, 20 July 2013

இதுவும் கடந்து போகும் .... என் கவிதை சு.மா.காயத்ரி



இதுவும் கடந்து போகும் ....
என் கவிதை சு.மா.காயத்ரி

 


கணங்களாய்
நொடிகளாய்
நிமிடங்களாய்
மணிகளாய்
நிற்காமல் ஓயாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
இந்த காலம்....
எது நடந்தாலும்
யாருக்காவும் நிற்காமல்
தானுண்டு தன் வேலையுண்டு
என்று சுயநலமாய் சுற்றித்திரிகிறது
காலப்பறவை.....
முடிவில்லாமல் எதுவும் இல்லை
பக்கம் பக்கமாய் எழுதினாலும்
சிறு புள்ளியால்
முற்று பெறுகிறது....
எதுவாயினும்
வலிகள் கொன்றாலும்
உறவுகள் உதறினாலும்
புயல் வந்து ஓய்ந்தாலும்
நினைவுகள் அழிந்தாலும்
முன்னோக்கி முயல்வோம் 
இதுவும் கடந்து
போகும் என்று ......

Friday, 19 July 2013

இது காதல் காலமடி..... என் கவிதை சு.மா.காயத்ரி


இது காதல் காலமடி.....
என் கவிதை சு.மா.காயத்ரி

 


மேகம் மயங்கி
சூரியனிடம் லயித்திருக்கிறது
மேகமூட்டமாய்
அந்தி மழை நேரம்.....
மரங்களினூடே
சிதறி தெறிக்கும்
சிறு சிறு நீர் துளி
யாருமில்லா சாலை
நம்மிரு இதயத்துடிப்பு......
சேரத்துத்துடிக்கும்
தேநீர் கோப்பைகள்....
நமக்கு பிடித்த பாடல்
சுமந்து சுற்றும் இசைத்தட்டு
குளிர் காற்று அணைப்பு
திகட்டாத முத்தங்கள்.......
யாருக்கும் கேட்காமல்
உனக்கு மட்டும்
ரகசிய பேச்சு மெதுவாய்
உன் காதுகளில் ......
சிறு போர்வையில்
இரு உயிர்கள் !!!!

# இது காதல் காலமடி ......