Friday, 19 July 2013

இது காதல் காலமடி..... என் கவிதை சு.மா.காயத்ரி


இது காதல் காலமடி.....
என் கவிதை சு.மா.காயத்ரி

 


மேகம் மயங்கி
சூரியனிடம் லயித்திருக்கிறது
மேகமூட்டமாய்
அந்தி மழை நேரம்.....
மரங்களினூடே
சிதறி தெறிக்கும்
சிறு சிறு நீர் துளி
யாருமில்லா சாலை
நம்மிரு இதயத்துடிப்பு......
சேரத்துத்துடிக்கும்
தேநீர் கோப்பைகள்....
நமக்கு பிடித்த பாடல்
சுமந்து சுற்றும் இசைத்தட்டு
குளிர் காற்று அணைப்பு
திகட்டாத முத்தங்கள்.......
யாருக்கும் கேட்காமல்
உனக்கு மட்டும்
ரகசிய பேச்சு மெதுவாய்
உன் காதுகளில் ......
சிறு போர்வையில்
இரு உயிர்கள் !!!!

# இது காதல் காலமடி ......

No comments:

Post a Comment