Wednesday, 27 May 2015

என் நீண்ட பயணம் ... என் கவிதை சு.மா.காயத்ரி

என் நீண்ட பயணம் ...
என் கவிதை சு.மா.காயத்ரி 



காரிருள் கானகத்தில் 
வழி மறந்த பறவையாய் 
வாழ்கை என்னும் முள்கூண்டினுள் 
சிக்கி தொலைகிறேன் ....
தனிமையில் !!!
எல்லா திசைகளிலும் என்னை 
என்னை தன்னுடன் இழுத்து செல்கின்றது 
எந்த பாழாய் போன வாழ்கை ....
எப்பொழுது விடியும் 
இந்த வாழ்கை முடியும்...
கால் தூரம் கூட கடக்கவில்லை 
எனக்கேன் இந்த வெறுப்பு...
தொடங்கி முடிந்து விட்டால் 
எனக்கு  நிம்மதி 
தொடங்காமலே முடிந்து விட்டால் 
பெரு  நிம்மதி  இங்கு பலருக்கு...
எல்லாம் மாறும் மாறும் என 
வாழ்க்கையின் திசையே இங்கு மாறிவிட்டது ....
என்னால் யாருக்கும் எதுவும் தரமுடியவில்லை 
என் நீண்ட பயணம் பலருக்கு 
நிம்மதியை நிச்சயம் தரும்.....
வரும்போது என்னிடம் ஒன்றும் இல்லை 
இந்த பயணம் போகும் போது 
தொலைந்த வாழ்க்கையும் 
சில தருணங்களையும் கொண்டு செல்கிறேன்
யாருக்கும் தெரியாமல் ....
எந்த துணையுமில்லாமல்....
என்ன எழுதுவது என்று தெரியாமல் 
நீண்ட நேரம் சுவாசித்து 
யோசித்து  நிற்கிறேன்....
இது என் கடைசி கவிதையானாலும் 
அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை !!!
இது தான் என்  வாழ்கை 
இதில் வாழ எனக்கு  ஒன்றுமேயில்லை...

Monday, 18 May 2015

எல்லாம் கடந்து போகும் எப்போது ... என் கவிதை சு.மா.காயத்ரி

எல்லாம் கடந்து போகும் எப்போது ...என் கவிதை சு.மா.காயத்ரி 



நதியினுடே செல்லும் சருகைப்போல மனம் போன போக்கிலே வளைந்து நெளிந்து சுவடு தெரியாமல் மிதந்து கொண்டிருக்கிறேன் ....வாழ்வின் கால் வயது கூட தீரவில்லை ஏனோ வாழ்ந்து சலித்த உணர்வு ....எனக்கென எனக்கென நினைத்தவர்கள் எல்லாம் இன்று தனக்கென தனக்கென மாறிவிட்டார்கள் ....எல்லாம் கடந்து போகும் கடந்து போகும் என நானே வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கடந்து விட்டேன் இனி கடந்து செல்ல ஒன்றும் இல்லாமல் ....