Monday, 18 May 2015

எல்லாம் கடந்து போகும் எப்போது ... என் கவிதை சு.மா.காயத்ரி

எல்லாம் கடந்து போகும் எப்போது ...என் கவிதை சு.மா.காயத்ரி 



நதியினுடே செல்லும் சருகைப்போல மனம் போன போக்கிலே வளைந்து நெளிந்து சுவடு தெரியாமல் மிதந்து கொண்டிருக்கிறேன் ....வாழ்வின் கால் வயது கூட தீரவில்லை ஏனோ வாழ்ந்து சலித்த உணர்வு ....எனக்கென எனக்கென நினைத்தவர்கள் எல்லாம் இன்று தனக்கென தனக்கென மாறிவிட்டார்கள் ....எல்லாம் கடந்து போகும் கடந்து போகும் என நானே வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கடந்து விட்டேன் இனி கடந்து செல்ல ஒன்றும் இல்லாமல் ....

No comments:

Post a Comment