கனவுகள் பெரிய கனவுகள் ......
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

கனவுகள் உனக்கானவை
உன்னால் மட்டுமே முடியும்......
கனவென்னும் வில்லால்
நம்பிக்கை என்னும் அம்பினை எய்து பார் ......
குறியை தாக்குகிறதோ இல்லையோ
எப்படியும் அதன் பக்கத்திலாவது வீழ்ந்து விடுவாய்.....
நீ என்ன வேரோடு சாய்ந்த மரமா
எழுந்து நிற்காமல் இருக்க......
வேரோடு சாய்ந்த மரம் கூட ......
அதன் விதை கொண்டு விருட்சமாக எழவில்லையா .......
உன் கனவுகள்
உன்னால் மட்டுமே முடியும் ....
உன் கனவினை யாராலும்
சரியாக செதுக்க முடியாது உன்னை தவிர.......
வீழ்ந்து விட்டோம்.....
வீழ்ந்து விட்டோம்.....
வீழ்ந்து விட்டோம்.....என
வீழ்ந்து கிடப்பதை விட....
வீழ்ந்து தானே விட்டோம் என்று
எழுந்து பார் .......
உனக்கான கனவு தனக்கான சிற்பிக்காக
காத்து கொண்டிருக்கும்.......
எழுந்து நிற்க முடியாமல் திணறுவதால் தான்
பல கனவு சிற்பங்கள்
சிற்பி இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறது.....
நம்பிக்கை என்னும் வார்த்தையில் கூட
கை ஒடிந்து விழுந்தால் கூட
நம்பி இரு என்னால் மட்டுமே முடியும் என்று......
வீழ்ந்து பார்......
எழுந்து பார் ......
வாழ்ந்து பார் .....
வாழ்கை அழகானது.......அர்த்தமுள்ளது.....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

கனவுகள் உனக்கானவை
உன்னால் மட்டுமே முடியும்......
கனவென்னும் வில்லால்
நம்பிக்கை என்னும் அம்பினை எய்து பார் ......
குறியை தாக்குகிறதோ இல்லையோ
எப்படியும் அதன் பக்கத்திலாவது வீழ்ந்து விடுவாய்.....
நீ என்ன வேரோடு சாய்ந்த மரமா
எழுந்து நிற்காமல் இருக்க......
வேரோடு சாய்ந்த மரம் கூட ......
அதன் விதை கொண்டு விருட்சமாக எழவில்லையா .......
உன் கனவுகள்
உன்னால் மட்டுமே முடியும் ....
உன் கனவினை யாராலும்
சரியாக செதுக்க முடியாது உன்னை தவிர.......
வீழ்ந்து விட்டோம்.....
வீழ்ந்து விட்டோம்.....
வீழ்ந்து விட்டோம்.....என
வீழ்ந்து கிடப்பதை விட....
வீழ்ந்து தானே விட்டோம் என்று
எழுந்து பார் .......
உனக்கான கனவு தனக்கான சிற்பிக்காக
காத்து கொண்டிருக்கும்.......
எழுந்து நிற்க முடியாமல் திணறுவதால் தான்
பல கனவு சிற்பங்கள்
சிற்பி இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறது.....
நம்பிக்கை என்னும் வார்த்தையில் கூட
கை ஒடிந்து விழுந்தால் கூட
நம்பி இரு என்னால் மட்டுமே முடியும் என்று......
வீழ்ந்து பார்......
எழுந்து பார் ......
வாழ்ந்து பார் .....
வாழ்கை அழகானது.......அர்த்தமுள்ளது.....
