Wednesday, 30 January 2013

வலிகள் .... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

வலிகள் ....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

வலிகள் எத்தனை.....
விதம் வகை.......
வலிகள் யாருக்கும் புரிவதில்லை
வலி கொண்டவனை தவிர .....
வலியின் துணை எப்பொழுதும் கண்ணீர் ....
எழுத முடியாத எழுத்துக்கள் .....
பேச முடியாத வார்த்தைகள் .....
ஏற்க முடியாத நிர்பந்தங்கள் .....
சகிக்க முடியாத சூழ்நிலைகள் .....
விடை இல்லா கேள்விகள் .....
கண்ணீர் !!!!!
கண்ணீர் என்ன காவிரியா......
மடை திறக்க அனுமதி  வேண்டி காத்திருக்க ....
வலியின் விடை கண்ணீர்......
வலிகள் எல்லாம் கரைந்து போகும்
கண்ணீர் வாயிலாக .....
கண்ணீர் கொண்ட கண்கள் ....
தூய்மையாகும் வலி  கொண்ட இதயம்  போல .......
ரத்தம் புரட்சியின் விளைவு .....
பசி உணவின் துவக்கம் ....
கண்ணீர் எழுத்தின் ஆக்கம் .....
கண்ணீர் எழுத்தின் ஊக்கம் .....
என் கண்ணீர் என் எழுத்து .....








No comments:

Post a Comment