Wednesday, 30 January 2013

மரணம் ஈன்ற ஜனனம் ....... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

மரணம் ஈன்ற  ஜனனம் .......
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

மரணம் ....
உயிரின்  அமைதி ....
ஜனனத்தின் தோன்றல் ......
வாழ்வின் மகிழ்ச்சி  துக்கம் எல்லாம் பார்த்து
ஓய்ந்திருக்கும்....
ஒவ்வொரு மரணம் பல கண்ணீர் பல நிம்மதி
கடந்து செல்லும்.....
மரணத்தின் கண்ணீர் வலிமை வாய்ந்தது
நமக்கான கண்ணீர்
நம்மை நேசித்த....
நாம் நேசித்தவர்களின் பரிசு இறுதியாக ....
உயிரின் எடை கண்ணீர் .....
ஒவ்வொரு மரணத்தின் எல்லை.....
ஒவ்வொரு ஜனனத்தின்  தோன்றல்....
ஜனனம் மரணத்தின்
வாயில் தொட்டு.....
உயிரின் உருமாறி .....
தோன்றும் போது இடம் பொறுத்து
இன்பம் இன்பம்......
வேண்டாத இடத்தில ஜனனம்
கண்ணீர் கண்ணீர் ...
ஜனனம் மரணத்தின் எல்லை......


No comments:

Post a Comment