இது போர்வை காதல்
என்கவிதை சு.மா.காயத்ரி
காலை முதலே அலுத்து கிடந்த
இந்த மனதிற்கும் உடலுக்குமான
சிறு இடைவேளை
ஆதவன் மங்கி மங்கி
தான் கூடு திரும்பும் நேரம்
காலை முதல்
பளீரென்று பல்லிளித்து காட்டிய
இந்த வானம்
என்னை போலவே கரும் போர்வை
போர்த்தி எட்டிப்பார்த்தது
எங்கோ எவனோ
தின்று வீசிய உருளை சீவளின்
காகிதம் என்முன்னே
பறந்து சென்றது காற்றில்...
மெல்ல வீசிய
மண்வாசத்தினூடே
மிதந்து வந்தது
சிற்சிறு மழை துளிகளும்
போர்வையில் ஒளிந்து கொள்ளவா
இல்லை
எழுந்து செல்லவா ?
எந்த புடவை வாங்குவது என்ற
குழப்பத்தை விட
பெருங்குழப்பம் இது !
சட சடவென்று பெய்த
மழை துளியின்
சப்தமும்
நேற்று காயவைத்த
துணியின் நியாபகமும்
ஐயோ !
சட்டென்று எழுந்தேய் ஓடினேன்
போர்வையினூடே..
என்கவிதை சு.மா.காயத்ரி
காலை முதலே அலுத்து கிடந்த
இந்த மனதிற்கும் உடலுக்குமான
சிறு இடைவேளை
ஆதவன் மங்கி மங்கி
தான் கூடு திரும்பும் நேரம்
காலை முதல்
பளீரென்று பல்லிளித்து காட்டிய
இந்த வானம்
என்னை போலவே கரும் போர்வை
போர்த்தி எட்டிப்பார்த்தது
எங்கோ எவனோ
தின்று வீசிய உருளை சீவளின்
காகிதம் என்முன்னே
பறந்து சென்றது காற்றில்...
மெல்ல வீசிய
மண்வாசத்தினூடே
மிதந்து வந்தது
சிற்சிறு மழை துளிகளும்
போர்வையில் ஒளிந்து கொள்ளவா
இல்லை
எழுந்து செல்லவா ?
எந்த புடவை வாங்குவது என்ற
குழப்பத்தை விட
பெருங்குழப்பம் இது !
சட சடவென்று பெய்த
மழை துளியின்
சப்தமும்
நேற்று காயவைத்த
துணியின் நியாபகமும்
ஐயோ !
சட்டென்று எழுந்தேய் ஓடினேன்
போர்வையினூடே..



