Saturday, 13 July 2019

ஏனோ ? என் கவிதை சு.மா.காயத்ரி

ஏனோ ?




எழுத்துக்களே  உதிக்காத
நாட்கள் கடந்து
ஏனோ  எழுதியாவது
கடந்துவிடு
என்கிறது என் மனது...
வார்த்தைக்கு வார்த்தை
யோசித்து யோசித்து
எழுதாது போன
நாட்களும் உண்டு
நிற்காத அருவியாய்
கொட்டிக்கொண்டு
விழும் நாட்கள்
இன்று..
என்ன எழுதுவது
என்று எழுதாத
கவிதைகள் பல
எதையாவது எழுதிக்கொண்டிரு
என எழுதும்
கவிதைகள் சில
.
.
.
.
.
ஏனோ ?

இப்படியும் சில மனிதர்கள்.......!! என் கவிதை சு.மா.காயத்ரி

இப்படியும் சில மனிதர்கள்!!!!





அமிலம்தான் தெளித்து விட்டேன்
ஏனோ ! நீயும்
அமைதியாக கடந்துவிட்டாய்
மருந்திடத்தான் நினைக்கிறன்
வடுவேய் மறைந்த பின்பு
சிரித்துக்கொண்டே
கடக்கிறாய்
வடுவின் வலி தெரிந்த போதும்..
காயம்பட்ட வடுகூட
மறைந்து விட்டது
ஏன் காயமாக்கினேன்
என்ற வலி மட்டும்
அகலவில்லை
என் மனதை விட்டு!!!

ஒரு போர்வை இரு தூக்கம் !!! என் கவிதை சு.மா.காயத்ரி

ஒரு போர்வை இரு தூக்கம் !!!!


விடிந்தாலும் விடியாத
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.
நீயும் நானுமாய்
விழித்து பார்க்க எங்கும்
எந்தன் விழிகள்
லைத்திருக்க வேண்டுகிறது
எந்தன் மனம்
விழித்திருக்கையில்
போர்வை பகிர்வை
விரும்பும் நாம்
ஆழ்த்த உறக்கத்தில்
எனோ அவரவர்
பக்கம் இழுக்கின்றோம்
இரு வேறு கனவுலகத்தில்
செல்கின்றோம் என நினைத்து
ஒரு கனவுலகத்திற்கு
பயணிக்கிறோம்
ஒரு மனம் கொண்ட
பயணியாய்
.
.
.
.
#பயணிப்போம்