Friday, 26 April 2013

என்னோடு வா ..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



என்னோடு வா .....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

baloons, boy, girl, love
தொலை தூரம் செல்வோம்
தொலைந்து போவோம்
என்னில் நீயுமாய்
உன்னில் நானுமாய் ......
கடக்காத தூரம் எல்லாம்
கடப்போம் கிடப்போம்
நம்மை மறந்து .......
என்னை மீறி நீ
செய்யாத செயல்களும்
உன்னை மீறி
நான் செய்யாத செயல்களும்
வா செய்யலாம்
நம்மையும் மீறி
ஒரு அளவோடு சில கனவோடு .......
என்னோடு எப்பொழுதும் வேண்டாம்
என் விழி கருமணியில்
உன் பிம்பம் தெரியும் வரை
மட்டும் போதும் ......
எப்பொழுதும்
குளக்கரை கொக்காய்
வடைக்கான காகமாய்
நிலவுக்கான வானமாய்
எனக்கான நீ ........
மண்ணோடு மழை வாசம்
கரையோடு புயல் வீசும்
நொடிகள் போலத்தான்
என்னோடு நீ இருக்கும் போது
என் சுவாசம் ........
தொலைந்து போகிறேன் உன்னில்
உன்னில் என்னை
எக்கணமும் தொலைத்து விடுகிறேன் .......
தேடுகிறேன் என்றோ என்னில்
தொலைத்த உன்னை ........

# என்னோடு வா !!!!!



No comments:

Post a Comment