Tuesday, 9 April 2013

என் இனிய பொன் நாள் ........என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



சுட்டெரிக்கும் வெயில் ஒளி
ஜன்னல் வழி வந்து
கண் கூசி
என் இமை உள்ளே உடுருவி
என்னை விழிக்க வைத்தது !!!!!
அவன் அவன் வேளைக்கு
அவன் அவன் செல்கிறான்
போகிற போக்கில் அடித்து 
செல்லும் ஒலி வெள்ளம்
வாகன இரைச்சல்
காது வழியே ஊடுருவி
என்னை எழுப்பி விடுகிறது!!!!
பக்கத்து வீட்டில் பாடு கேட்க
தெருவிற்கே ஒலி வைத்து
இம்சை தருகிறார்கள் !!!!
இரவில் சார்ஜில் போட்டு
தூங்கிய கை பேசியில்
எவனோ அழைத்த விடுபட்ட அழைப்பும்
தவறாது அனுப்பும் குறுஞ்செய்தியை
அரை கண்ணால் பார்த்து
கண் மூடுவதில் ஒரு சுகம் !!!!!
காற்று வராமல் கண் திறந்தால்
பேன் போடு என்றால் 
கரண்ட் போய் பத்து நிமிஷம்
ஆச்சு என்கிறது ஒரு குரல் !!!!!
பாட்டு சத்தம் நின்றாச்சு
கரண்ட் போயாச்சு
வேர்வை வந்தாச்சு
தூங்கவும் முடியாது
நேரம் ஆச்சு
மெஸ் கிளோஸ் பண்ண போறாங்க
என்றதும்
அடித்து பிடித்து குளிக்க ஓடினால்
கொட்டும் தண்ணீர் போல்
வேகமாய் தொடங்குகிறது
 என் இனிய பொன் நாள்  ......

No comments:

Post a Comment