Saturday, 22 August 2015

பெண்ணும் கல்வியும் என் கவிதை சு.மா.காயத்ரி

பெண்ணும் கல்வியும்
என் கவிதை சு.மா.காயத்ரி

 Educate Girls Logo Small.jpg
சார்ந்து சார்ந்து
சோர்ந்து போனவர்கள்
இந்த பெண் பாலினங்கள்....
தகப்பனை சார்ந்து
சகோதரர்களை சார்ந்து
கணவனை சார்ந்து
பின் பிள்ளையை சார்ந்து....
என் இந்த தயக்கம்...
வளர்ந்தால் ஒன்றும் வீழ்ந்து
விட மாட்டோம்...
வீழ்த்தியும் விட விட மாட்டோம்...
வீழவும் விடமாட்டோம்...
அறிவியல் வளர்ச்சியில்
தூரம் போகும் இந்த உலகம்...
பதினெட்டு ஆயிற்றா
மணவாளனை தேடுவதை
விட்டுவிட்டு...
நல்ல கல்லூரியை தேடுங்கள்...
ஆண் கல்வி நம் வீட்டுக்கு மட்டும் தான்....
பெண் கல்வி இந்த நாட்டிற்கு...
கல்வி எனும் மூன்றெழுத்து மந்திரம்
ஒரு மாயச்சொல்...
பெண்மையின் துணை !!!
தனி ஒருவனின் துணை சார்ந்து
நில்லாமல்...
இவளின் துணை சார்ந்து பலர் நிற்க
பெண் கல்வி அவசியம்...
மகளாகி
மனைவியாகி
தாயாகி
முடிவதில்லை இந்த வாழ்கை....
பட்டங்கள் வாங்கியும்
சட்டங்களை ஆண்டும்
முடியவேண்டும் இந்த பெண்களின் வாழ்கை....
பெண் கல்வி வீட்டிற்கு அல்ல
நாட்டிற்கு...
பெண்களை பேணுவோம்

கல்விக்கு குரல் கொடுப்போம்...  

Thursday, 13 August 2015

வீழ்வதற்கல்ல வாழ்கை .... என் கவிதை சு.மா.காயத்ரி

வீழ்வதற்கல்ல வாழ்கை ....
என் கவிதை சு.மா.காயத்ரி
























இது என்ன ஒரு முறை ஓடும்
பந்தையமா ?
வீழ்ந்தவுடன் தேங்கி நிற்பதற்கு...
இந்த வாழ்கை முழுவதும் உன்னை சுற்றிலும்
பந்தையங்கள்...
விழு
எழு ஓடு
ஓடிகொண்டே இரு...
எத்தனை முறை விழுந்தால் என்ன
இது உன் பந்தயம்
எழுந்து கொண்டே இரு...
எல்லா எழுச்சியும்
உன்னை சுற்றி பல இதயங்களை
எழுச்சியால் எழவைக்கிறது ....
இந்த பந்தயம் உனக்கும்
உன் முயற்சிக்கும் தான் ....
வீழ்ந்து விடாதே..

வென்று விடு !!!

Wednesday, 12 August 2015

இந்த பூக்களை மிதிக்காதீர்கள்.... என் கவிதை சு.மா.காயத்ரி

இந்த பூக்களை மிதிக்காதீர்கள்....
என் கவிதை சு.மா.காயத்ரி






















காதலிப்பவர்களுக்கு இந்த தோட்டத்தில்
அனுமதி இல்லை....#
இந்த பூக்கள் என்றோ மலர்ந்தது
இரு மனங்களில்..
இது விற்பனைக்கும்  அல்ல
இது பார்வைக்கும் அல்ல...
கண் கவர்ந்து வளர்ந்து செழித்து
நின்றது ஒரு காலத்தில்...
இன்றோ ஒற்றை மனதில் நீர் இன்றி
கண்ணீரால் மடிந்து நிற்கிறது...
இங்கு துளிர்க்கவும் வழியில்லை
மடிந்து விடவும் மனமில்லை...
தன்னந்தனியாக யாருமில்லா
வழியில் நிற்கிறது...
காதலில் மீண்டவர்கள் யாரேனும் இருந்தால்
கொஞ்சம் நீர் விட்டு செல்லுங்கள்...
மடிவது தற்கலிகமாகட்டும்
இந்த செடியின் மரணம்...
நீர் மட்டும் போதும் யாரின்

கண்ணீரும் செடியை சிதைத்துவிடும்....

Thursday, 6 August 2015

இனி இப்படித்தானோ... என் கவிதை சு.மா.காயத்ரி

இனி இப்படித்தானோ...
என் கவிதை சு.மா.காயத்ரி 











நீயும் நானென என் கனவுகள்

ஏனோ காணல் நீராய் போனது...
என்னை மீட்டுக்க எல்லாம்
செய்து விட்டேன்...
கூகுளுக்கும் வழியும்
என் வலியும் தெரியவில்லை...
அந்த நினைவுகளை என்ன செய்வது...
புத்தகமா கிழித்து செல்ல
இல்லை ..
திரைப்படமா அழித்து செல்ல
என் மனமாயிற்றே என்ன செய்வது...
அழிக்கவும் தெரியவில்லை 

அழியவும் மனமில்லை...