இந்த பூக்களை மிதிக்காதீர்கள்....
என் கவிதை சு.மா.காயத்ரி
காதலிப்பவர்களுக்கு இந்த தோட்டத்தில்
அனுமதி இல்லை....#
இந்த பூக்கள் என்றோ மலர்ந்தது
இரு மனங்களில்..
இது விற்பனைக்கும் அல்ல
இது பார்வைக்கும் அல்ல...
கண் கவர்ந்து வளர்ந்து செழித்து
நின்றது ஒரு காலத்தில்...
இன்றோ ஒற்றை மனதில் நீர் இன்றி
கண்ணீரால் மடிந்து நிற்கிறது...
இங்கு துளிர்க்கவும் வழியில்லை
மடிந்து விடவும் மனமில்லை...
தன்னந்தனியாக யாருமில்லா
வழியில் நிற்கிறது...
காதலில் மீண்டவர்கள் யாரேனும்
இருந்தால்
கொஞ்சம் நீர் விட்டு செல்லுங்கள்...
மடிவது தற்கலிகமாகட்டும்
இந்த செடியின் மரணம்...
நீர் மட்டும் போதும் யாரின்
கண்ணீரும் செடியை சிதைத்துவிடும்....

No comments:
Post a Comment