Wednesday, 10 October 2012

மாற்றங்கள் !!!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

மாற்றங்கள் !!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


அன்று மலர்ந்த  அல்லி போல
அகம் மலர்கிறேன்!!!
முன் நாளில் என்னை கவர்ந்தவை எல்லாம்
படங்களாய் ஓடிக்கொண்டிருக்கிறது
கண் முன்னே !!!
ஆதவனோடு காய்ந்த கருங்கூந்தல்
காற்றில் அலையோடி
முகம் தீண்டும் ஸ்பரிசம் !!!!
நுனி வரை நகம் கடித்து
நினைக்கும் யோசனைகள் !!!
எங்கெங்கோ நடக்கும் போது
எதிர்படும் கண்களில்
கணநொடி காதல்கள் !!!
மனம் விரும்பிய மைப்பேனா
சிக்கிகொண்டது எங்கோ
ஓடி ஒளிகையில்
 அதன் துணையோடு!!!!
எப்போதும் தூர விலகி செல்லும்
தெரு நாய் கூட
காவலாய் வீடு வந்தது இன்று!!!
எப்போதும் பல அடி தள்ளி நிற்கும் பேருந்து
நான் நிற்கும் இடத்தில்
இன்று நின்ற போது !!!
பல மணி நேரம் காத்திருந்தவர்களுக்கு
ரயில் வரவில்லை
நான் சென்று நின்றவுடன்
வந்து நின்றது !!!
நீர் வேண்டி விக்கல் எடுக்கையில்
நினைவில் நின்றவர்
ஒருவர் மட்டுமே!!!
யாரோடும் பேசாத எதிர் வீடு அக்கா
என் பெயர் கேட்ட போது !!!
யாரை பார்த்தாலும் மிரண்டு அழும்
குழந்தையின் முத்தம் எனக்கு !!!
எதேச்சையாக வானொலியில் என் மனம்
கவர்ந்த பாடல் !!!
சன்னலோர மழை.......
முகத்தோடு அலை....
மாற்றம் யாரோடும் எங்கேயும் எப்போதும்!!!!

No comments:

Post a Comment