Saturday, 6 October 2012

மழையோடு வந்தவன் மனதோடு நின்றவன் என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

மழையோடு வந்தவன் மனதோடு நின்றவன் !!!!!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


உடல் சோர்ந்து உலகம் மறந்த ஒரு நாள்!!!
கண்ணீர் தீர்ந்து கடல் வற்றிய ஓர் பொழுது !!!
மழைவேண்டி மனம் ஏங்கியது ....
யார் யாரோ நடந்து செல்லும் ஒரு பாதை!!
சாலை ஓர மரங்களில் வெண்பனி பூக்கள் !!!
சில்லென்று காற்று ......
சட சடவென்று மழை .....
தட தடவென்று ஓடும் மக்கள்....
மழை !!!அடுக்கடுக்காய் திரை சீலை போல
பெய்துகொண்டிருந்தது ....
மழை விட்டு ஓட மனம் ஒப்பவில்லை !!!!
திரை சீலைகள் திறக்கவில்லை !!!
யார் மீதோ மோதிகொண்டேன்!!!
கைகள் மட்டும் பேசி கொண்டன
ஸ்பரிசமாய் இரு வார்த்தைகள் !!!!
இடிகள் முழங்கின ....
இடம் பெயர்ந்தோம் ...
திசைகொருவராய் !!
மழையும் நின்றது ...
நீயும் நின்றாய் ....
என் மனதோடு !!!!!

No comments:

Post a Comment