இது நமக்கு மட்டும் .....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
மொட்டை மாடி போதும் என்றேன்....
நானிருக்கிறேன் என்றாய்
இன்னும் கொஞ்சம் மேலே
தண்ணீர் தொட்டி ஏறினோம் ....
நம்மிரு தலை சாய்த்து
மேக உருவங்கள் பேசினோம்
நான் முயல் என்றேன் ....
நீ மான் என்றாய் !!!!
நட்சத்திரங்கள் நகர்கிறது என்றேன் .....
மேகம் நகர்கிறது என்றாய் நீ !!!
நிலவில் ஒரு பெண் என்றேன்....
நீ இல்லை பாட்டி தாத்தா என்றாய் !!!!
தூர போகும் விமான வெளிச்சம்
கண் கூசுவதாய் சொன்னாய் ......
பொய் சொல்லாதே என்றேன்
நீ எப்போதும் என்னை நம்புவதில்லை என்றாய் !!!!
என்னென்னவோ பேசினாய்
உன்னோடு தான் இருந்தேன் நினைவுகளில்
ஆனால் எனக்கான கனவில் !!!!
மழை வருகிறது என்றாய்
தூறல் என்றேன் நான் !!!!
இங்கிருந்து விழுந்தால் என்னவாகும் என்றேன்
நல்ல அழகான பெண்ணை
திருமணம் செய்வேன் என்றாய் .....
உன்னிடம் ஒன்று கேட்பேன் என்றேன்
சரி கேள் என்றாய்....
ஒன்றும் இல்லை என்றேன்
பொய் சொல்கிறாய் என்றாய் நீ ....
சரி போகலாம் என்றேன்
சொல் சொல் என்றாய்
என்ன சொல்லட்டும் என்றேன் ....
எதாவது என்றாய் ....
எனக்கு தூக்கம் வருகிறது என்றேன் ...
போடி என்றாய் ...
போடா என்றேன் ....
சரி வா போகலாம் என்றாய்......
ஊரெல்லாம் உறங்கி விட்டது
கதை பேசி ....
நம் கதை முடிவில்லா தொடர்கதை !!!!
தொடரும்......
இது நமக்கு மட்டும் .....
நானிருக்கிறேன் என்றாய்
இன்னும் கொஞ்சம் மேலே
தண்ணீர் தொட்டி ஏறினோம் ....
நம்மிரு தலை சாய்த்து
மேக உருவங்கள் பேசினோம்
நான் முயல் என்றேன் ....
நீ மான் என்றாய் !!!!
நட்சத்திரங்கள் நகர்கிறது என்றேன் .....
மேகம் நகர்கிறது என்றாய் நீ !!!
நிலவில் ஒரு பெண் என்றேன்....
நீ இல்லை பாட்டி தாத்தா என்றாய் !!!!
தூர போகும் விமான வெளிச்சம்
கண் கூசுவதாய் சொன்னாய் ......
பொய் சொல்லாதே என்றேன்
நீ எப்போதும் என்னை நம்புவதில்லை என்றாய் !!!!
என்னென்னவோ பேசினாய்
உன்னோடு தான் இருந்தேன் நினைவுகளில்
ஆனால் எனக்கான கனவில் !!!!
மழை வருகிறது என்றாய்
தூறல் என்றேன் நான் !!!!
இங்கிருந்து விழுந்தால் என்னவாகும் என்றேன்
நல்ல அழகான பெண்ணை
திருமணம் செய்வேன் என்றாய் .....
உன்னிடம் ஒன்று கேட்பேன் என்றேன்
சரி கேள் என்றாய்....
ஒன்றும் இல்லை என்றேன்
பொய் சொல்கிறாய் என்றாய் நீ ....
சரி போகலாம் என்றேன்
சொல் சொல் என்றாய்
என்ன சொல்லட்டும் என்றேன் ....
எதாவது என்றாய் ....
எனக்கு தூக்கம் வருகிறது என்றேன் ...
போடி என்றாய் ...
போடா என்றேன் ....
சரி வா போகலாம் என்றாய்......
ஊரெல்லாம் உறங்கி விட்டது
கதை பேசி ....
நம் கதை முடிவில்லா தொடர்கதை !!!!
தொடரும்......
இது நமக்கு மட்டும் .....
