Thursday, 18 July 2013

என்னை என்ன செய்தாய் ..... என் கவிதை சு.மா.காயத்ரி


என்னை என்ன செய்தாய் .....
என் கவிதை சு.மா.காயத்ரி




என்னை என்ன செய்தாய்
நான் என்ன செய்கிறேன்
புரியாத புதிராய்
கணம் கணம்
இதம் இதம்......
உயிர் கோர்த்தாய்
எனக்குள்
உயிர் கொடுத்தேன்
என் எழுத்துக்கு .......
சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எழுத்துக்கள்
கவிதையாய் மாறி
காவியமாகும்....
நடு சாலையில்
கரம் சேர்த்தாய்
சிறு மழைச்சாரலில்
இதழ் சேர்த்தாய் மெதுவாக ....
சிறு பறவையாய் நான்
என் வானமாய் நீ
உன்னில் சிறகு விரிக்கிறேன்......

# என்னை என்ன செய்தாய் !!!!!

 

No comments:

Post a Comment