Tuesday, 9 July 2013

கல் விழுந்த கண்ணாடி மாளிகை....... என் கவிதை சு.மா.காயத்ரி



கல் விழுந்த கண்ணாடி மாளிகை
என் கவிதை சு.மா.காயத்ரி

 

 என்னவெல்லாம் நினைத்தேன்....
வாழ்வின் எல்லை தொட
விண்முட்டி மேக ஊர்வலம் செல்ல......
கனவென்னும் கனவுகள்
காற்றில் கரைந்துபோகும்
விந்தையென்ன......
சுகம் சுகம் என
சுகமளித்தவை எல்லாம்
சுகமாய் இல்லை
என்னோடு சேர்த்து......
என் கனவில் நீ நீ மட்டுமே
நானும் நீயாகி போனேன்
உன் கனவில் நான் மட்டும்
இல்லையென்ற போது
தீயாகி போனேன்.......
கடல் கொண்டுசென்ற
மண் வீடு போல
கணம் கணம் தவிக்கிறேன்.....
எல்லாம் தண்ணீரில் எழுதிய
கனவுகள்.....
இது
# கல் விழுந்த
கண்ணாடி மாளிகை


No comments:

Post a Comment