Tuesday, 11 December 2012

எனக்காக நீ !!!!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

எனக்காக நீ !!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


யாருக்காகவும் யாரும் நிற்பதில்லை
காலம் நேரம் உட்பட ...
வேகமாய் ஓடும் காலச்சக்கரம்
யாரையும்  இழுத்து  செல்வதில்லை
தன்னோடு ....
நிர்பந்தம் .......கட்டாயம்  என்னும் இரு சொற்கள்
பின்னோடு ஓடி கொண்டிருக்கிறோம் ....
மழை என்னும் துளிகள்
மண் மீது விழும் நேரம் ...
யாருக்காவும் யாரும் நிற்பதில்லை ....
விட்டால் போதும் என விடைபெறுகிறோம் ...
யாருக்காகவும் யாரும் பேசுவதில்லை ....
காரணங்களுக்காக மட்டும் கலந்து பேசுகிறோம் ....
எனக்காக யாரும் பேசுவதில்லை
மனிதர்களில் உன்னை தவிர ....
உனக்காக நான் பேசாத போதும்
எனக்காக நீ மட்டும்  பேசிக் கொண்டிருக்கிறாய்
என்னிடம் மட்டும் ......
என்னை பற்றிமட்டும் .......
எனக்காக மட்டும் .......
எனக்காக நீ .....
எனக்கான நீ ......

2 comments: