Thursday, 20 December 2012

இன்று கடைசி நாளாம்.....!!!! என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி



என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
இன்று கடைசி நாளாம்.....
நேற்றில் இருந்து ஏதோ
நடந்துகொண்டுள்ளது .....
பார்பவர்கள் எல்லாம்
என்னென்னவோ
  சொல்கிறார்கள்.....
சேர்த்து வைத்ததை எல்லாம்
தர்மம் பண்ண சொல்கிறார்கள்....
ஆசைப்பட்டதை செய்யுங்கள் ..
என்று அறிவுரைகள் வேறு
 
நாளைக்கு கம்பெனி லீவ் உண்டா
என்று கேட்கும் போது
கொஞ்சம் பயமாய்தான் இருக்கிறது ....
ஒன்றரை
 நாள் விடுப்புடன் கூடிய
சம்பளம் ......
 ஹய்யோ
நான்
 இன்னும் லீவ் போடலியே.....
என்னடா வாழ்கை இது ...
லீவ் வும்
 போச்சு....
உலகம் அழிந்தால் உயிரும் போச்சு ....
இந்த மாசம் சம்பளம் ..?
கும்கி படம் கூட பாக்கலயே...!
நல்ல இருக்குன்னு நண்பன் சொன்ன ஞாபகம்...
ஊருக்கு போய் உயிர் விடலாம் என்றால்
டிக்கெட் இல்லையாம் ரயிலில் ...
கடன் கூட எவனும் தருவதில்லை.....
நாளைக்கு உலகம் அழிந்தால்
என்னடா பண்ணுவிங்க ..?
தர்மம் பண்ணுங்கள் என்று
நானும் சொல்லி கொண்டிருக்கிறேன்....
நாளைய முடிவு என்னவாகும் என்று
தெரியாமல் ....


2 comments: