Friday, 21 December 2012

என் வலிகள் கொஞ்சம் தான் போல !!!!!! என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

என் வலிகள் கொஞ்சம் தான் போல !!!!!!

என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி



என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி

 
எனக்கு மட்டும் ஏன் இப்படி
என்று பலநாள் கலங்கி இருக்கிறேன் .....
எனக்கென்று யாருமில்லை என்று
மனசாட்சி இல்லாத
மனதும் நினைத்து கொள்கிறது .....
பல கதைகள் கேட்கும் போதும்
பார்க்கும் போதும்
எப்படி தான் தாங்குகிறர்களோ....
என்று மனது துடிக்கிறது ...
என்னடா வேலை இது
என்று எண்ணம் மேலோங்கிய போது ..
.....நடந்த நிகழ்ச்சி .....
இன்று காலை என் விடுதியில்
வேலை செய்யும் வயதான பாட்டி
என்னை அழைத்து
"எந்த நம்பர் -கு போன் போட்டுதாமா "
என்று கேட்ட போது
மறுக்கமுடியவில்லை .....
சரி என்று அழைத்து கொடுத்தேன் ...
ஒரு நிமிடம் கூட இருக்காது ...
பேசிட்டேன் மா என்று சொன்னபோது ...
அதற்குள்ளவா என்றேன்
ஆமா மா என்று சொல்லி விறு விறு என்று நடந்த போது......
என்னவென்று புரியவில்லை .....
பின் தான் தெரிந்தது
தாய்  கூட பேச அருமை மகனுக்கு விருப்பம் இல்லையாம் .....
என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை ...
உணவு உண்ணும் போது
மனதின் ரணம் ஆறவில்லை
இவர்களை எல்லாம் என்ன சொல்லி திட்டுவது ....

No comments:

Post a Comment