பிரசுரிக்கபடாத சுவர் மொழி கதைகள் !!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
சுவர்மொழி கதைகள் ஒருபோதும் பிரசுரிகப்படுவதில்லை
மொழியின் ஆழம் எப்பொழுதும்
எப்பொழுதும் வலியின் நீளம்
மனிதர்கள் மாற மாற
கதைகளும் மாறிவிடுகிறது !!!!
புத்தகமான சுவர்கள்
மையாகிய கண்ணீர்கள் !!!
ஒவ்வொரு கதைக்கும் அவரவரே ஆசிரியர்கள் ....
கதைக்களம் எப்பொழுதும் அதேதான் !!
சுவர்களே பார்வையாளர்கள்
ஒருபோதும் மாறுவதில்லை !!!!
எப்பொழுதும் மௌனமான அவர்கள்
பல கதைகள் தோன்ற ஊக்குவிப்பவர்கள் !!
பார்வையாளர்கள் ஒருபோதும் பேசுவதில்லை
பேச அனுமதிக்கப்படுவதில்லை .....
எந்த புத்தகத்திலும் சுவர்மொழி கதைகள்
பிரசுரிகப்படுவதில்லை....
வரி வரியாய்...
பக்கம் பக்கமாய் ....
கதைகள் படித்து படித்து
கல்லாகி போன சுவர்கள்
கண்ணீர் சிந்த மறந்துவிட்டது .....
என்ன கதை சொன்னாலும் சுவர்கள்
சிரிப்பதும் அழுவதும் இல்லை !!!!
கதைகள் பிடித்தாலும் கை தட்டுவதில்லை !!!
கதைக்காக யாரும்
மாற்றலாகி செல்வதில்லை
சுவர் சுவராய் !!!
சொன்னவர் தவிர யாராலும்
சொல்லமுடிவதில்லை சுவர் மொழி கதைகளை !!
தொலைந்து போன கதையாளர்கள் !!!
மறந்து போன கதைகள் !!!
இறந்து போன சுவர்கள் !!!
அதனால் ............
சுவர் மொழி கதைகள் ஒருபோதும் பிரசுரிக்கபடுவதில்லை !!!!
கவித்திரி சு .மா.காயத்ரி
சுவர்மொழி கதைகள் ஒருபோதும் பிரசுரிகப்படுவதில்லை
மொழியின் ஆழம் எப்பொழுதும்
எப்பொழுதும் வலியின் நீளம்
மனிதர்கள் மாற மாற
கதைகளும் மாறிவிடுகிறது !!!!
புத்தகமான சுவர்கள்
மையாகிய கண்ணீர்கள் !!!
ஒவ்வொரு கதைக்கும் அவரவரே ஆசிரியர்கள் ....
கதைக்களம் எப்பொழுதும் அதேதான் !!
சுவர்களே பார்வையாளர்கள்
ஒருபோதும் மாறுவதில்லை !!!!
எப்பொழுதும் மௌனமான அவர்கள்
பல கதைகள் தோன்ற ஊக்குவிப்பவர்கள் !!
பார்வையாளர்கள் ஒருபோதும் பேசுவதில்லை
பேச அனுமதிக்கப்படுவதில்லை .....
எந்த புத்தகத்திலும் சுவர்மொழி கதைகள்
பிரசுரிகப்படுவதில்லை....
வரி வரியாய்...
பக்கம் பக்கமாய் ....
கதைகள் படித்து படித்து
கல்லாகி போன சுவர்கள்
கண்ணீர் சிந்த மறந்துவிட்டது .....
என்ன கதை சொன்னாலும் சுவர்கள்
சிரிப்பதும் அழுவதும் இல்லை !!!!
கதைகள் பிடித்தாலும் கை தட்டுவதில்லை !!!
கதைக்காக யாரும்
மாற்றலாகி செல்வதில்லை
சுவர் சுவராய் !!!
சொன்னவர் தவிர யாராலும்
சொல்லமுடிவதில்லை சுவர் மொழி கதைகளை !!
தொலைந்து போன கதையாளர்கள் !!!
மறந்து போன கதைகள் !!!
இறந்து போன சுவர்கள் !!!
அதனால் ............
சுவர் மொழி கதைகள் ஒருபோதும் பிரசுரிக்கபடுவதில்லை !!!!




