Wednesday, 26 September 2012

கனவின் பயணம் !!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

கனவின் பயணம் !!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


நீண்டு கொண்டே உள்ளது
விடியலின் வாசல் வரை ...
எங்கும் நிற்காமல் !!
அந்த உலகம் போல இந்த உலகம் இல்லை
பயணசீட்டும் இல்லை !!
பரிசோதகரும் இல்லை !!
நிற்பதே இல்லை நிறுத்தம் நிறுத்தமாய்....
கனவின் பயணசாலையில்
நெரிசல்களே இல்லை !!
காவல்துறையின் கண்காணிப்பும் இல்லை !!
பயணம் முழுவதும் யாரும் துணையாக
வருவதில்லை நிழலை தவிர ...
யாருமே தோற்பதில்லை
கனவின் பயணங்களில் !!!
யாருமே நிற்பதில்லை யாருக்காகவும்
கனவில் !!!
பயணம் மிக அழகானது
விடியும் வரை !!!!

No comments:

Post a Comment