Tuesday, 18 September 2012

நீ இல்லாத ஊரில் ........என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி


நீ இல்லாத ஊரில் ........என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


வான வில்லும் வெறும் வில்லாகிறது ......
மழை பெய்த சாலை குழிகளில்
மழை நீர் மட்டுமே உள்ளது !!!
உன் முகம் எங்கே ???
நீ சென்ற ரயில் தினமும் வருகிறது
நேரத்திற்கு ....
நீ எங்கே வரவில்லை ??
பேருந்தின் ஜன்னல் ஓரம் இடம் கிடைத்தும் ....
கண்கள் முடியே இருக்கிறேன் ..
நீ இல்லாத ஊரில் யாரை பார்ப்பது ??
இங்கு பூக்களே கிடைப்பதில்லை
உன்னை பார்க்காமல்
பூக்கள் பூக்கவே மறந்துவிட்டது போல !!
மரங்கள் எல்லாம் இலையை கண்ணீராக
நினைத்து  உதிர்த்துகொண்டே இருக்கிறது !!!
நீ இல்லாத ஊரில்
யாருமே யாராகவும் இல்லை !!!
நீ இல்லையெனில் !!!

No comments:

Post a Comment